கந்துவட்டி கொடுமையால் கூலி தொழிலாளி விபரீத முடிவு - கோவில்பட்டி அருகே அதிர்ச்சி

x

தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கதிரவன் 8 ஆண்டுகளுக்கு முன் நடராஜன் என்பவரின் மனைவியிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கதிரவன் திரும்ப கொடுத்துள்ள நிலையில், மேலும் 16 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என நடராஜன் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த கதிரவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்