குற்றாலத்தில்.. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பொருட்கள்.. நீடிக்கும் தடை.. சுற்றுலா பயணிகள் உஷார்..

x

கடந்த 16ஆம் தேதி விதிக்கப்பட்ட தடையானது வெள்ளப்பெருக்கு குறையாததால் தற்போது வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் பழைய குற்றால அருவியிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது.

தற்போது குற்றால ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

மெயின் அருவியில் நீர்வரத்து சீராகாத நிலைமையில் இன்று அல்லது நாளை நீர்வரத்து முற்றிலும் சீரான பின்பே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்