வெடியால் வந்த வினை! சேதாரமான வீடுகள் - கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே, கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் மேலும் இரண்டு வெடிமருந்துகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்