உடன் பிறந்த தம்பியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற அண்ணன்... கிருஷ்ணகிரியில் கொடூர சம்பவம்

x

சூளகிரி அடுத்த லாலிக்கல் கிராமத்தை சேர்ந்த தேவராஜுக்கும், இவரது அண்ணன் மஞ்சுநாத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சானமாவு என்ற இடத்தில், தன் விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார். அப்போது, தனது நண்பர்களுடன் அங்கு வந்த மஞ்சுநாத், தேவராஜை இரும்பு ராடால் தாக்கியும், அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டும் தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தலைமறைவாக இருந்த மஞ்சுநாத் அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர். பின்னர், மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்....


Next Story

மேலும் செய்திகள்