கோயம்பேடு பாலத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய அரக்கன்.. - ஒரு நொடியில் `அம்பி’யாக மாறி கெஞ்சிய `அந்நியன்’

x

சென்னை, கோயம்பேடு மேம்பாலத்தில்... மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மனைவியை நடுரோட்டில் இறக்கிவிட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இளம் பெண் மயங்கி விழுந்தது பரபரப்பை மேலும் கூட்டியது. இதனை சாலையில் சென்ற வழக்கறிஞர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். உடனே, சுதாரித்துக் கொண்ட இளைஞர், மயங்கி விழுந்த மனைவியை காப்பாற்றுமாறு கூறி சாலையில் சென்றவர்களை அழைத்து நாடமாடிய நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்