கோவை சிறையில் அடைக்கப்பட்ட My V3 Ads ஓனர்

x

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் My v3 ads என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. தனது நிறுவனம் மீது புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக்தி ஆனந்த், தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை கடந்த 10ம் தேதி முற்றுகையிட்டார். அப்போது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்தி ஆனந்த்தை கைது செய்தனர். இதனிடையே, சக்தி ஆனந்த்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்த நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்