கோவை மக்களுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

கோவை மாநகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கும் வகையில், பில்லூர் 3-வது திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நேரு, சிறுவாணி தண்ணீர் குறித்து கேரள அரசிடம் கேட்டதற்கு, மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் தர இயலவில்லை என காரணம் சொல்வதாக கூறினார். மேலும், பில்லூர் 3-வது திட்டத்தின்கீழ், நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன்மூலம் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்