பிரம்மாண்ட வீடு..கோடியில் பிசினஸ் -கனடாவிலிருந்து வீட்டுக்கு வந்த மகள்- குடும்பத்தையே சிதைத்த தந்தை

x

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு விசித்ரா என்பவருடன் திருமணமான நிலையில், ஸ்ரீநிதி மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் இருந்தனர். இதில், ஸ்ரீநிதி கனடாவில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரனுக்கு, தொழில் நஷ்டமடைந்து கோடிக்கணக்கில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 கோடி அளவில் மிகப்பிரமாண்டமாக ராமச்சந்திரன் வீடு கட்டி வந்ததாகவும் தெரிகிறது. மேலும், மதுபாட்டில்களுக்கு மூடிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த ராமச்சந்திரன், திடீரென தன் இரு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நால்வரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கடன் தொல்லையால் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனரா அல்ல வேரேதும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்