ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - கோவையில் பரபரப்பு

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ள மின்மாற்றியில் திடீரெனெ ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால், அருகே இருந்த சருகுகளிலும் தீ பரவி எரியத் துவங்கியது.

உடனடியாக அலுவலக ஊழியர்கள் துணிகளைக் கொண்டும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்