சயானை பாலோ செய்யும் `மர்ம நிழல்' - கொடநாடு வழக்கில் பகீர் ட்விஸ்ட்.. அதிர்ச்சி வாக்குமூலம்

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் முன்கூட்டியே விசாரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சயான் சொல்லக்கூடிய தகவல் குறித்தான விசாரணை பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையாள மொழியில் 31 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை சயான் வழங்கியுள்ளார். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த சயான், ஊடகங்களிடம் பேசக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஏற்கெனவே, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், தன்னை யாரோ பின் தொடர்வதாக போலீசாரிடம் சயான் தெரிவித்திருந்த சூழலில் அவர் பேருந்து நிலையம் செல்லும் வரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்