கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் - திடீர் போராட்டம்

x

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து ஏராளமான தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த தேயிலை எஸ்டேட்டின் கணக்குகள் முடக்கப்பட்டு, அமலாக்க துறையின் விசாரணையில் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனிடையே, தற்போது வரை தீபாவளி போனஸும் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்