ஓடும் வழியில் பழுதான கியர்.. கியரை பிடித்தபடியே திகில் பயணம்.. கரணம் தப்பினால் மரணம்....கடைசியில்...

x

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கியர் மாற்றும் கம்பியை பயணி ஒருவர் பிடித்தபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பரவி வருகிறது. வத்தலகுண்டில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கிக் கொண்டிருந்த போது கியர் மாற்றும் கம்பி திடீரென இணைப்புக் கம்பியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், விபத்து ஏற்படாமல் தடுக்க பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை கெட்டியாகப் பிடித்தபடி பயணம் செய்துள்ளார். சக பயணிகள் பேருந்தில் பீதியுடன் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், தரமான பேருந்துகளை மலை பகுதிகளுக்கு அனுப்ப மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்