"நடு இரவில் கதவை தட்டி.."..கொல்லை புறத்தில் ரத்தம் வடிய வடிய...சிவகாசியை உறையவிட்ட இளைஞரின் கோலம்

x

வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில், இளைஞர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகேயுள்ள நெல்லுகுத்தி பாறைதெருவை சேர்ந்தவர் குணசேகரன். 25 வயதான இளைஞரான இவரை, ஐந்திற்கும் மேற்பட்ட கும்பல் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் பட்டா கத்தி மற்றும் அரிவாளால் தாக்கப்பட்டு குணசேகரன் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரவோடு இரவாக இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கொலையின் பின்னணி குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்