ஒரே நாளில் கிலோக்கணக்கில் சிக்கிய புகையிலை பொருட்கள்..அதிகாரிகள் நடத்திய கிடுக்குப்புடி விசாரணை

x

திருச்சி தில்லை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கி வைக்கபட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி காந்தி மார்க்கெட்டில் முருகன் என்பவரின் டீக்கடையில் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தில்லைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 163 கிலோ உள்பட ஒரே நாளில் 182 கிலோ புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் சம்பந்தப்பட்ட 4 பேர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டநிலையில், அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்