லாரி முழுவதும் கிலோ கணக்கில் கஞ்சா..மாறி மாறி பேசி மாட்டிக்கொண்ட டிரைவர்..அதிரடி காட்டிய தூத்துக்குடி போலீஸ்

x

கோவில்பட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ கஞ்சா மற்றும் மினி கண்டெயினர் லாரி பறிமுதல் - மத போதகர் உட்பட 3 பேரை கைது செய்து தனிப்படை காவல்துறை அதிரடி நடவடிக்கை...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் வழியாக சென்னை பதிவு எண் கொண்ட மினி கண்டைனர் லாரி நிறுத்தி தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள முயன்றனAdguர் அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை எடுத்து தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்ததில் அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து 3 பேரையும் பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடிக்கு கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்டது தெரிய வந்ததை எடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த (மத போதகர்) ஜான் அற்புத பாரத் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு( 39) (டிரைவர்) தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து மினி கண்டைனர் லாரியில் 300 பாக்கெட்டுகளில் கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா மற்றும் மினி கண்டைனர் லாரியையும் தனிப்படை பிரிவு காவல் பறிமுதல் செய்தனர்

இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்

கோவில்பட்டி பகுதியில் அதிக அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்