கரூரை அலறவிட்ட கொலை... ரவுடி தலையை சிதைத்து பழிதீர்த்த கும்பல்..? - போலீஸ் குவிப்பு; தொற்றிய பதற்றம்

x

கடந்த 2012ஆம் ஆண்டு அவனியாபுரம் அருகே பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய நபரான ராமர் என்கிற ராமகிருஷ்ணன் மற்றும் கார்த்தி ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். விசாரணை முடிந்த பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, அவர்களை பின்னால் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று, இருவரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ராமர் தலை சிதைத்தபடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராமரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்