மகளுடன் தங்கியிருந்த தாய்..கை கால்கள் இல்லாமல் டிரம்மில் கிடந்ததால் அதிர்ச்சி

x

கர்நாடகாவில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலம் டிரம்மில் அடைக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியில் ஒரு பழைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ட்ரம்மில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டறிந்தனர். அந்த ட்ரம்மை திறந்து பார்த்த போது அதில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். அந்த நபர் 70 வயதான சுசீலாம்மா என்பது தெரியவந்தது. இவர் தனது மகள் மற்றும் சில உறவினர்களுடன் அப்பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. மூதாட்டியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்