பிளாட்டில் சிக்கிய ரூ.18 கோடி? - சிக்கலில் கர்நாடக காங்கிரஸ் பிரமுகர்
கர்நாடகாவில், அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய 18 கோடி ரூபாய் பணம் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமானதா? என வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகசிய தகவலின் பேரில், கர்நாடகாவின் தார்வாடில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பசவராஜ் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் உள்ள பீரோவில் இருந்து, கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை எண்ணிப் பார்த்ததில் 18 கோடி ரூபாய் என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளரான பசவராஜ், காங்கிரஸ் பிரமுகர் பி.ஷெட்டி என்பவரின் கணக்குகளை நிர்வகித்து வந்தவர் என்பதால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.