மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய கைப்பந்து வீரர் - அதிர்ச்சியில் மக்கள்

x

காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பிளோமின் ராஜ். புதுச்சேரி நேஷனல் அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரராக இருந்து வந்த இவர், ஃபைபர் கேபிள் இணைக்கும் பணியையும் மேற்கொண்டு வந்தார். இவருக்கு திருமணமாகி கனிமொழி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளன. வழக்கம்போல, வேலைக்கு சென்ற பிளோமின் ராஜ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், காளிகுப்பம் கடற்கரை பகுதியில் ரத்த காயங்களுடன் பிளோமின் ராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு கூடிய உறவினர்கள், பிளோமின் ராஜின் உடலைக் கண்டு கதறி அழுதது வேதனை அளித்தது. சமீபத்தில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பிளோமின் ராஜ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கையில் முதல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்