அரசு பேருந்து நடத்துநரை கன்னத்தில் கத்தியால் குத்திய இளைஞர் - குமரியில் அதிர்ச்சி

x

கற்றுவாயில் இருந்து அருமனை வழியாக மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய இளைஞர், பின்னிருக்கையில் அமர்ந்தவாறு நடத்துநரிடம் 100 ரூபாய் கொடுத்து அருமனைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்... மீதமுள்ள 93 ரூபாயை நடத்துநர் தன் இருக்கையில் அமர்ந்தவாறே வழங்கியுள்ளார்... அதை வாங்கிக் கொண்ட அந்த இளைஞர் அருமனை சந்திப்பு வந்ததும் திடீரென அந்த இளைஞர் தான்ம் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு நடத்துநர் விஜயனின் கன்னத்தில் குத்தி விட்டு, "டிக்கெட்டுக்கான பாக்கியை எழுந்து வந்து தர முடியாதா?" என்று கேட்டபடி பேருந்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்... அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொதுமக்களும் ஓடிச் சென்ற இளைஞரைத் துரத்திப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்... தொடர்ந்து காயமடைந்த நடத்துநரை மீட்டு அருகில் உள்ள அருமனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்... விசாரணையில் அந்த இளைஞர் திருவட்டாரைச் சேர்ந்த 26 வயது மெல்பின் என்பது தெரிய வந்தது... தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்