மூதாட்டியை தாக்கி இரண்டரை சவரன் செயினை பறித்து சென்ற இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த வியாகுலம்மா என்ற மூதாட்டி, தேவாலயத்திற்கு சென்றுவிட்டு தனிமையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, மூதாட்டியை பின்னால் இருந்து தாக்கி கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றார். இதில் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சின்னத்துறை பகுதியை சேர்ந்த அஜின் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்