நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறம் தொற்றிக்கொண்ட பள்ளி மாணவர்கள் - பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

x

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர், சரக்கு லாரியின் பின்புறம் ஆபத்தான நிலையில் தொற்றிக் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் பின்னால் ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளி மாணவர்கள் இவ்வாறு பயணம் செய்துள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், உரிய நடவடிக்கை எடுக்ககோரி பள்ளிக் கல்வித்துறையையும், போலீசாரையும் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்