சென்னை அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் சீண்டல் - அதிர்ந்து போன பெற்றோர்

x

காஞ்சிபுரம் அருகே, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், சகாயராஜ் தாளாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனிடம், சகாயராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், பள்ளி தாளாளர் சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்