ஒரகடத்தை நடுங்க வைத்த கும்பல் - சேஸ் செய்துபிடித்த காவல் துறை

x

ஒரகடம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தாக்கி, மர்மநபர்கள் செல்போன், பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்துச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஒரகடம் ஜங்ஷனில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அப்போது, போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், ஆப்பூர் பகுதியை சேர்ந்த மணி, பிரகாஷ், லாரன்ஸ், கண்ணன் என தெரியவந்தது. 4 பேரும் ஒரகடம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதியானதை அடுத்து, அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் தப்பியோட முயற்சித்து, மதில் சுவர் மீது ஏறி கீழே குதித்தில், 4 பேருக்கும் கைமுறிவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்Kanchipuram


Next Story

மேலும் செய்திகள்