விசாரணையில் வெளியான உண்மை - மூன்று போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

x

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்றவரை, லஞ்சம் கேட்டு தாக்கிய 3 காவலர்கள் ச‌ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மகாவீர் ஜெயந்தி அன்று, கரசங்கால் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க 3 காவலர்கள் சென்றனர். அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பெருமாள் என்பவரை பிடித்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பெருமாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்திய தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் சங்கர், ஆனந்த‌ராஜ் மற்றும் கணேஷ் சிங் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்