திடீரென உடைந்த ஏரி... நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த ஏரி நீர்

x

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை உடைந்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஏரி நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். ஏரியின் கரை தானாகவே உடைந்ததா அல்லது மர்ம நபர்கள் கரையை உடைத்தனரா என சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென்று தண்ணீர் புகுந்ததால் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும், ஏரி உடைந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் நடுவீரப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்