ஜூனியர் தேசிய பிஸ்ட்பால் போட்டி - பல்வேறு மகளிர் அணிகள் பங்கேற்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம் புஸ்பகிரியில் உள்ள டியானோ வித்யாஸ்ரம் பள்ளியில் பதினான்காவது ஜூனியர் தேசிய பிஸ்ட்பால் சாம்பியன் போட்டி நடைபெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கு என தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் 18 மாநிலங்களை சேர்ந்த ஆடவர் அணிகளும், 16 மாநிலங்களை சேர்ந்த மகளிர் அணிகளும் கலந்து கொண்டன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இந்நிகழ்வில் பிஸ்ட்பால் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் பாலவிநாயகம், தேசிய பொருளாளர் பிரேம் சிங், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா, ஓய்வு பெற்ற சுங்கத்துறை உதவி ஆணையர் அழகேசன், பள்ளி செயலாளர் நான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்