கண் எதிரே நடந்த களவு.. `கப்' பென்று பிடித்த போலீஸ்

x

காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற இளைஞரின் செல்போனை மூன்று பேர் பறித்துச் சென்றதைக் கண்ட போலீசார், அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சுனில் குமார், பகவதி, கார்த்தி ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்