நடுரோட்டில் திடீரென நின்ற லாரி..வேகமாய் வந்து மோதிய எமன் - சிக்கி தவித்த ஓட்டுனரின் பகீர் காட்சிகள்

x

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், மினி லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுனரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் மினி லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியின் முன்பக்கம் நொறுங்கியதில், அதன் ஓட்டுனர் பாலாஜி வெளியேறமுடியாமால் உள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளார். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், அரைமணி நேரம் போராடி பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்