லிட்டர் லிட்டராக சாராய ஊறல் - போலீசார் அதிரடி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில், 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர். தேர்தல் நேரம் என்பதால், கல்வராயன் மலையில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கல்வராயன்மலை முழுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அருவங்காடு வனப்பகுதிகளில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊரால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை அங்கேயே கொட்டி போலீசார் அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்