#JUSTIN || சென்னையை மிரட்டும் எண்ணெய்.. கையிலெடுத்த புது டெக்னீக்..

x

எண்ணூர் எண்ணெய் கசிவை விரைந்து அகற்ற நடவடிக்கை. "எண்ணூர் கிரீக் பகுதி எண்ணெய் கசிவை விரைந்து அகற்ற 75 படகுகள், 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்". கிரீக்கிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக எண்ணெய் ஸ்கிம்மர் இயந்திரம் இன்று பயன்படுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் மேலும் 4 எண்ணெய் ஸ்கிம்மர்களை பயன்படுத்திட திட்டம்- தமிழக அரசு. 75 படகுகள், தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து எண்ணெயை உறிஞ்சி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்ல ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தைப் பேண சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ முகாம்கள்.


Next Story

மேலும் செய்திகள்