பிரபல ஜுவல்லரியில் நகை சேமிப்பு திட்ட மோசடி - கோர்ட் அதிரடி

x

பிரணவ் ஜுவல்லரி நகை சேமிப்பு திட்ட மோசடி விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது. பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா கால நெருக்கடியால் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் சுமூகமான முறையில் தீர்வு காண தயாராக உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கு முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்