மப்பில் JCB-யை இயக்கி பைக்கில் வந்தவர் மீது மோதி விபத்து... பரிதாபமாக பலியான நபர்...

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, ஜே.சி.பி. வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். சித்தூ​ரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பெரம்பலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ராமநத்தம் காவல்நிலையம் எதிரில், ஜே.சி.பி. இயந்திரம் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். எனினும் வழியிலேயே உயிர்பிரிந்தது. ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய கார்த்திக் என்பவர், மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்