மீனவர்களுக்கு ஜன. 10 வரை நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

நாகை மீனவர்கள் 12 பேருக்கான சிறைக்காவலை வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீனவர்கள் 12 பேர் பருத்தித்துறை கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் சிறைக்காவல் முடிந்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வரும் 10-ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்