"ஜாஃபர் சாதிக் மீது 26 வழக்குகள் உண்மையா?" - சென்னை காவல்துறை கொடுத்த விளக்கம்

x

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது, சென்னை பெருநகர காவல் துறையில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பரவி வரும் செய்தி பொய்யானது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூறியபடி, ஜாஃபர் சாதிக் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில், போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தில், கடந்த 2013ம் ஆண்டு ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து கடந்த 2017ம் ஆண்டு, ஜாபர் சாதிக் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்