ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் கொடூர தாக்குதல்.. பிடிபட்ட கட்சி நிர்வாகி

x

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்