"திருடுனா ஹை ரேஞ்ச் வண்டி தான்.." - குறிவைத்து தூக்கும் மர்ம கும்பல் - சேலத்தில் அதிர்ச்சி

x

சேலத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் என்பவரது இருசக்கர வாகனம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. உயர்ரக வாகனங்களை குறிவைத்து திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்