"இது பொது வழியாக இருக்கணும்?" ஜேசிபி வைத்து தரைமட்டமாக வீட்டை இடித்த நபர்! கதறி அழும் உரிமையாளர்!

x

திருப்பத்தூர் மாவட்டம் மதனாஞ்சேரியில் வசித்துவரும் பிரகாசம் என்பவர், தங்களது வீட்டின் சுற்றுச்சுவரை செல்வக்குமார் என்பவர் இடித்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். தங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்வக்குமார் பொதுவழி கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அடியாட்களுடன் சேர்ந்து, வீட்டின் சுற்று சுவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஜேசிபி கொண்டு சுற்றுச்சுவரை இடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரகாசம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்