வெளியே வந்து 2 நாள் தான்.. - கவர்னர் மாளிகையில் அடுத்த ஆபரேஷன்.. - பரபரப்பை கிளப்பிய கருக்கா வினோத்

x

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், திடீரென அங்கு வந்த மர்மநபர் ஒருவர், கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் சுதாரித்துக் கொண்டு, அந்த நபர் 2வது முறையாக பெட்ரோல் குண்டு வீச இருந்ததை தடுத்து நிறுத்தி கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில், கைதான நபர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசாரிடம் கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து 2 நாட்களுக்கு முன்புதான் கருக்கா வினோத் வெளியே வந்த நிலையில், மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்