சென்னையில் இறங்கிய IT... சவுகார்பேட்டையை கதிகலங்க விட்ட ரெய்டு

x

சென்னையில் இறங்கிய IT... சவுகார்பேட்டையை கதிகலங்க விட்ட ரெய்டு

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

யானைக்கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடப்பாளையம் தெருவில் உள்ள மோல்டிங் குமார் என்பவருக்கு சொந்தமான தங்க நகை பட்டறை மற்றும் சுக்தேவ் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சவுகார்பேட்டை பகுதியில் நகை கொள்முதல் மற்றும் தங்கக் கட்டிகள் மொத்த விற்பனைக்கு பிற மாநில நகை வியாபாரிகளும் வருவார்கள். இங்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் தங்கமும் வர்த்தகம் ஆவதாகவும், கோடிக் கணக்கில் வருவாய் மறைக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் உள்ள நிலையில், வருமானவரித்துறையின் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்