"இது நக்சலைட் பிரச்சினையை போன்றது.." - நீதிபதி சொன்ன கருத்து

x

சாதிய பிரச்சினை நக்சலைட் பிரச்சினையை போன்றது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் ராயகிரி கிராமத்தை நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தென்மண்டல காவல்துறை தலைவர் நேரடி கண்காணிப்பில் டிஎஸ்பி விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், சாதிய பிரச்சினை நக்சலைட் பிரச்சினையை போன்றது எனவும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தப்படாவிட்டால், வகுப்புவாத மற்றும் ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்