தமிழகத்தில் இந்த வகை மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு?

x

மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் நோக்கில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீதான அதிகபட்ச தொகையை, சாதாரண வகையை பொறுத்த அளவில், புரூஃப் லிட்டர் ஒன்றுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, நடுத்தர வகைகளைப் பொறுத்த அளவில், புரூஃப் லிட்டர் ஒன்றுக்கு 300 ரூபாயில் இருந்து 600 ரூபாய்க்கும், உயர்தர வகைகளைப் பொறுத்த அளவில், புரூஃப் லிட்டர் ஒன்றுக்கு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கும் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வழிவகை செய்யும் சட்டம் முன் வடிவை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்