Paytm இவ்ளோ தில்லுமுல்லு செஞ்சிச்சா? - நீங்க ஏமாந்தீங்கனு உங்களுக்கே தெரியாதாம்..!

x

பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி நிதித்துறையின் நுண்ணறிவு பிரிவு, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மார்ச் 15-ஆம் தேதி முதல் தனது கணக்குகளில் புதிதாக வைப்பு தொகை பெறுவதற்கும், பணப்பரிமாற்றங்களுக்கும் கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஈடுபட்டதாக விசாரணை அமைப்புகளில் இருந்து தகவல் பெறப்பட்டது. அதன்பேரில், தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்