எலிகளின் சதி வேலையா..? பற்றியெரிந்த கார்... அதிர்ந்த அக்கம் பக்கத்தினர்

x

திருவண்ணாமலையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி நகர் பழைய பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவலளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காரின் பேட்டரி வயர்களை எலி கடித்ததால் தீப்பற்றி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்