ஸ்பெயினில் இரும்பு மனிதன் போட்டி - ஆயத்தமாகும் தமிழக வீரர்

x

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்பதற்காக, நாகர்கோயில் இளைஞர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அக்டோபர் மாதம் 13, 14 ,15, ஆகிய தேதிகளில் ஸ்பெயினில் நடைபெறும் இரும்பு மனிதன் போட்டிக்கு, தமிழ்நாட்டில் இருந்து முதல்முறையாக நாகர்கோயில் அருகே தாமரை குட்டிகளை என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கண்ணன் தேர்வாகியுள்ளார். போட்டியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று கடும் பயிற்சி மேற்கொண்டார். இந்த பயிற்சியை குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் துவக்கி வைத்து, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். போட்டியில் முதல் இடத்தை பிடிப்பேன் என்று இளைஞர் கண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்