"ஐபிஎல் மேட்ச் டிக்கெட் இருக்கு.!"-விளம்பரத்தால் பறிபோன 1 லட்சம்...ஆன்லைன் மூலம் அரங்கேறிய பலே மோசடி

x

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த நிஷாத் என்ற இளைஞர், ஆவடி சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 22ம் தேதி சென்னை - பெங்களூர் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட், விற்பனைக்கு உள்ளதாக டிவிட்டரில் விளம்பரம் வந்ததாகவும், அதுதொடர்பாக அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டபோது, ஹரி கிருஷ்ணன் என்பவர் பணம் கொடுத்தால் டிக்கெட் வாங்கிக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதனை நம்பி, 31 டிக்கெட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் வாயிலாக அனுப்பிய நிலையில், டிக்கெட் வராததால் ஏமாற்றப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். எனவே பணத்தை மீட்டுத் தரவும், மோசடி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நிஷாத் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்