இன்ஸ்பெக்டரின் அதிரடி ஆக்சன் - குவியும் பாராட்டுகள்

x

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு முன்பிருந்த பள்ளத்தை உடனடியாக மூட வைத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகிறது. தென்காசியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு, 15 அடி நீளத்திற்கு பள்ளம் உருவானது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர். நேற்று அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, இதை பார்த்து உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தார் கலவைகொண்டு அதனை சீரமைத்தனர். காவல் ஆய்வாளரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்