கல்லூரி மாணவரின் சட்டைப்பையில் சிக்கிய வினோத ஊசி... 6 பேரை கஸ்டடி எடுத்த போலீஸ்

x

கல்லூரி மாணவரின் சட்டைப்பையில் சிக்கிய வினோத ஊசி.. 6 பேரை கஸ்டடி எடுத்த போலீஸ்

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர், ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதன் வாயிலாக போதை ஊசிகள் தயாரித்து வந்தது தெரியவர அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இவ்வாறு தயாரிக்கும் போதை ஊசிகளை மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து சூர்யா விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. இதனடிப்படையில், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டுகளாக இவ்வாறு போதை ஊசிகளை விற்று வந்த கும்பல், கல்லூரி மாணவர் ஒருவரின் சட்டைப்பையில் போதை ஊசி இருந்ததன் அடிப்படையில் போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த போதை ஊசியை கையில் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க மாணவர்கள் பச்சைக்குத்திக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு.. இந்த கும்பல் விற்பனை செய்த போதை ஊசியால்... அதை பயன்படுத்துபவர்கள், இதய நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு ஆளாவார்கள் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்