டாய்லெட்டில் இருந்த பகீர் எழுத்துகள்.உடனே தரையிறங்கிய சென்னை விமானம் -நடுவானில் மரண பீதியான பயணிகள்

x

சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் தரையிறங்க 40 கிலோ மீட்டர் இருந்த நிலையில், விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், விமானத்தின் கழிவறைக்குள் இருந்த tissue பேப்பரில், தான் ஒரு பயங்கரவாத குழு என்றும், மும்பையில் விமானம் தரையிறங்கினால், தன்னுடையே பையில் இருக்கும் வெடிகுண்டு வெடித்து, அனைவரும் இறந்துவிடுவோம் என்றும் எழுதப்பட்டிருந்த‌து. இதையடுத்து, விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பயணிகளை உடனடியாக வெளியேற்றி, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு ஏதும் கிடைக்காத‌தால், மிரட்டல் ஒரு வதந்தி என தெரிய வந்த‌து. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்