இரு நாடுகளின் பிணைப்பை உறுதி படுத்தும் திருவிழா.. "ஒரு இந்தியர் கூட பங்கேற்கவில்லை"

x

மீனவர்கள் போராட்டம் காரணமாக, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில், இந்திய தரப்பிலிந்து யாத்ரிகர்கள் பங்கேற்கவில்லை என, ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சத்தீவு விழாவில் பக்தர்கள் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்